யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுக்கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நடப்பு நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தமையை ஒட்டி நடத்தப்பட்ட ஆண்டுப் பொதுக்கூட்டம் 23.07.2017 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.  27 அங்கத்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். மேலும் வாசிக்க

யாழ்.தமிழ்ச்சங்கம் கிளிநொச்சியில் முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா

 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்த ஆடிப்பிறப்பு விழா கிளிநொச்சி மகாதேவா சிறுவர் இல்லத்தில் 17.07.2017 திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் வரவேற்புரையை யாழ். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் தனித்தமிழ் ஆர்வலர் நா.வை. குமரிவேந்தனும் சிறப்புரைகளை கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளர் தி.யோண்குயின்ரஸ், யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி ஆகியோரும் ஆடிப்பிறப்பின் சிறப்புக் குறித்த … மேலும் வாசிக்க

சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விழா 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா இன்று 13.05.2017 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவன ஆதரவில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் லயன். கனகசபை அருள்நேசன் மங்கல விளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைமாணி தெ.திருவேரகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். வரவேற்புரையை … மேலும் வாசிக்க

சிறப்புற இடம்பெற்ற சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து முன்னெடுத்த சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் கடந்த 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. இங்கிலாந்தில் வாழும் வைரவநாதன் சிவரதனின் ஆதரவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் வாழ்த்துரையை கல்லூரி அதிபர் … மேலும் வாசிக்க

சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து முன்னெடுக்கும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் எதிர்வரும் 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. . இங்கிலாந்தில் வாழும் வைரவநாதன் சிவரதனின் ஆதரவில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் வாழ்த்துரையை கல்லூரி … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த உயர்தர வகுப்புக்களில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கான புதிய பாடத்திட்ட வழிகாட்டல் கருத்தரங்கு 04.03.2017 சனி, 05.03.2017 ஞாயிறு ஆகிய தினங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்வில் வடமாகாண தமிழ்ப்பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் கௌரி முகுந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ், யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஈ.குமரன், தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்ப் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் வெளியிட்ட பாரதிபற்றிய நூல் பாரதியின் கொள்ளுப்பேரனிடம் கையளிப்பு

இந்திய குடியரசு தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத் தூதரகத்தின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் சந்தித்துத் (26.01.2017) தமது முதல் வெளியீடாக அமைந்த பாரதியின் புலமைத்திறன் என்ற நூலைக் கையளித்தனர். இதன்போது தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தான் எழுதிய அந்நூலைக் கையளித்தார். பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பொதுச் செயலாளர் ச.லலீசன், துணைத்தலைவர் அருட்பணி … மேலும் வாசிக்க

நாவலர் விழா காணொளிகள்- நன்றி சிவன் ரீவி

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் கரிகணண் அச்சகதாரரும் இணைந்து நடாத்திய நாவலர் விழா நிகழ்வுகளை சிவன் தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியிருந்தது. அக் காட்சிகளின் காணொளிகளை இப்போதும் காணலாம். மேலும் வாசிக்க

சிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணனும் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா 24.12.2016 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொதுச் செயலாளர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவணக்கத்தை கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் வாசஸ்பதி ரஜீந்திரன் இசைத்தார். நாவலர் வணக்கச் சுடரை வாழ்நாள் பேராசிரியர் சி.க. சிற்றம்பலம் ஏற்றினார்.  வரவேற்புரையை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் வேல். நந்தகுமாரும் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா -2016

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் நிறுவனமும் இணைந்து நடத்தும் நாவலர் விழா 24.12.2016 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் நாவலரின் தொலைநோக்கு என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்கு கொள்ளும் ஆய்வரங்கு மற்றும் சென்னை கலாஷேத்திராவின் டிப்புளோமாதாரியான ஸ்ரீமதி ஷாலினி வாகீஸ்வரசர்மா (அமரர் கைலாசநாதக் குருக்களின் பேர்த்தி) அவர்களின் நாட்டிய அளிக்கை என்பன இடம்பெறவுள்ளன.  நிகழ்வில் கரிகணன் நிறுவனத்தார் 30 பாடசாலைகளுக்கு … மேலும் வாசிக்க