செங்கை ஆழியானின் மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு

சாகித்திய ரத்னா செங்கை ஆழியான், இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் ஓர் அத்தியாயமாகக் கொள்ளத்தக்கவர். யாழ். வண்ணார்பண்ணையில் உள்ள கலட்டியில் 1941 சனவரி 25இல் பிறந்தவர். தந்தை கந்தையா. வணிக முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர்;. தாய் அன்னம்மா. குடும்பத்தில் இவர் எட்டாவது பிள்ளை.. பாடசாலைக்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் புவியியல் துறைசார்ந்த  முதற்பட்டக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1984 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் 1991 இல் கலாநிதிப் பட்டத்தையும் … மேலும் வாசிக்க

யாழ். சென். பற்றிக்சில் நடைபெற்ற வீரமாமுனிவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் தமிழியல்சார் அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்தொடர் வரிசையில் கடந்த 19.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வீரமாமுனிவர் விழாவைச் சிறப்புற முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதன் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர்களுள் ஒருவருமாகிய அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வீரமாமுனிவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்ற பொருளில் மன்னார் கலையருவி நிறுவன இயக்குநர் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க நிர்வாகக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று 20.02.2016 மாலை பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. எதிர்வரும் சித்திரை (ஏப்பிரல்) மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தை நடத்திப் புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவதென முடிவு செய்யப்பட்டது. இதேவேளை தமது அங்கத்துவத்தைப் புதிப்பிக்காத வருடாந்த அங்கத்துவம் பெற்றவர்கள் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தமது அங்கத்துவத்தைப் புதுப்பிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்ச்சங்கத்தில் ஆயுள் அங்கத்தவராவதற்குரிய கட்டணம் ரூபா … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் வீரமாமுனிவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் தமிழியல்சார் அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்தொடர் வரிசையில் எதிர்வரும் 19.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வீரமாமுனிவர் விழா இடம்பெறவுள்ளது.  யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதன் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர்களுள் ஒருவருமாகிய அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் வீரமாமுனிவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்ற பொருளில் மன்னார் கலையருவி நிறுவன இயக்குநர் அருட்பணி … மேலும் வாசிக்க

தமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை

தமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை – கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதனின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அனுதாபம்.  கொழும்புத் தமிழச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் தனது 72 ஆவது வயதில் காலமானார். என்பது வேதனையைத் தருகின்ற செய்தியாக அமைந்துள்ளது. மக்கள் சேவையே தெய்வீகத் திருப்பணி என வாழ்ந்த இவர் அகில இலங்கை இந்து மாமன்றச் செயலாளராகவும்  முன்னணி சமூகத் தொண்டு அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார். நயினாதீவு … மேலும் வாசிக்க

இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற சி.வை.தாமோதரம்பிள்ளை நினைவு விழா

பாடசாலை மட்டத்தில் இளையோரைத் தமிழ்த்துறையில் ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மட்ட விழாக்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதல் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சி.வை. தாமோதரம்பிள்ளை விழாவாக இடம்பெற்றது. . 29.01.2015 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்விற்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமை தாங்கினார். சிறுப்பிட்டியில் உள்ள சி.வை.தா. நினைவு மன்றத்தின் பொருளாளரும் முன்னாள் … மேலும் வாசிக்க

சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா -2015

சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆறுமுகநாவலர் விழர் 27.12.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைத் தலைவரும் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினருமாகிய பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விழா அனுசரணையாளரான கரிகணன் அச்சக அதிபரின் துணைவியார்; திருமதி யாழினி ராஜ்குமார் மங்கலவிளக்கேற்றினார். மக்கள் வங்கி உத்தியோகத்தர் சி.சசீவன் நாவலர் வணக்கப்பா இசைத்தார். … மேலும் வாசிக்க

காணொளியாக பாரதி விழா

அண்மையில் வெகுசிறப்பாக பாரதி விழாவை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நல்லூர் துர்க்காதேவி மண்டபத்தில் கொண்டாடியது. இந் நிகழ்வின் காணொளியை கீழ் உள்ள இணைப்பில் காணலாம். நன்றி சிவன் ரீவி மேலும் வாசிக்க

மன்னர் காலத்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் வரலாறு என்பது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பற்றி ஞானம் ஞா.பாலச்சந்திரன் (தி.ஞானசேகரன் ஐயாவின் மகன்) எழுதிய நூலின் மென்பிரதி இணைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தொன்மைக்கும் பெருமைக்கும் சான்று பகரக்கூடிய கனதியான ஆவணமாக இதனைக் கொள்ளலாம். நூலினை வாசிக்க இங்கு அழுத்துங்கள் மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய பாரதி விழா கடந்த சனிக்கிழமை (10.10.2015) துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிருபாலேணர்ஸ் நிறுவனத் தொழிலதிபர் கிருபாகரன் தம்பதியர் மங்கல விளக்கேற்றினர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் வடிவாம்பிகை சுபதாஸ் தமிழ் வாழ்த்திசைத்தார். தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் வரவேற்புரையாற்றினார். இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் தொடக்கவுரையாற்றினார். முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கோகிலா மகேந்திரன் ‘பாரதி கண்ட அதியுயர் … மேலும் வாசிக்க