மரபுக் கவிதைப் பயிலரங்கு ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் மரபுக் கவிதைப் பயிலரங்கு 14.04.2018 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீனத்தில் ஆரம்பமாகியது. 
 
பயிலரங்க இணைப்பாளர் கவிஞர் கு.ரஜீபன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் கவிஞர் சோ.பத்மநாதன், கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர். 
 
நிகழ்வில் முப்பதிற்கும் மேற்பட்ட பயிலுநர்கள் கலந்து கொண்டனர். தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலர் வருகை தந்து தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 
Bookmark the permalink.

Leave a Reply