தமிழ்ச்சங்கத்தின் திருக்குறள் போட்டி 20.05.2018 ஞாயிறு 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் உயர்தரத்தில் தமிழ் கற்கும் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்படும் திருக்குறள்  போட்டி எதிர்வரும் 20.05.2018  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் 3 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. சுட்டெண் இல. தி 318 வரையுள்ளவர்களுக்கு இரசாயனவியல்துறை மண்டபத்திலும் தி.454 வரை முகாமைத்துவ பீட மண்டபத்திலும் தி 592 வரை வர்த்தகத்துறை (பல்கலைக்கழகப் பின்புறம்) மண்டபத்திலும் தி 740 வரை மருத்துவபீடப் பரீட்சை மண்டபத்திலும் போட்டி நடைபெறும் எனத் தமிழ்ச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 
மாணவர்களுக்கான சுட்டெண் மற்றும் அறிவுறுத்தல்கள் அடங்கிய கடிதங்கள் விண்ணப்பித்த பாடசாலைகளுக்கு அஞ்சலிடப்பட்டுள்ளதாகவும் மேலதிக விபரங்கள் தேவைப்படுமிடத்துப் பொதுச் செயலாளர் இ.சர்வேஸ்வராவுடன்  தொடர்புகொள்ளுமாறும் தமிழ்ச்சங்கம் விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Bookmark the permalink.

Leave a Reply