யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட திருக்குறள்  தேர்வு முடிவுகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் கடந்த 20.05.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வின் முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இணைப்பில் அழுத்தி PDF file வடிவத்தில் பார்வையிட முடியும். 60 புள்ளிகளுக்கு மேற்பெற்ற அனைவருக்கும் பரிசில்கள் எதிர்வரும் 27.05.2018 அன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும் வள்ளுவர் விழாவில் வழங்கப்படும். 
நாற்பது புள்ளிகளுக்கு மேற்பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் விரைவில்  சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

 
விழாவின் போது பரிசு மற்றும் சான்றிதழ்கள் பெறும் மாணவர்கள் பாடசாலைச் சீருடையில் சமுகமளித்துப் பரிசில்களைப் பெற்றுக்கொள்ளுமாறு போட்டி இணைப்பாளர் திரு. கு. பாலசண்முகன் அறிவித்துள்ளார். மேலும் இவர்களுக்கான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்அறிவித்துள்ளார்
 
 
Bookmark the permalink.

Leave a Reply