சிறப்புற இடம்பெற்ற யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் வள்ளுவர் விழா 

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சிவகணேசன் புடைவையகமும் இணைந்து நடத்திய திருவள்ளுவர் விழா கடந்த 27.05.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர்  ச.லலீசன் தலைமையில்  நடைபெற்றது.  ஒருமுகப் பறை நடனத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில்  தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத்தின் உபதலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் சிறப்புரையை வள்ளுவரின் முற்போக்குச் சிந்தனைகள் என்ற பொருளில் கொட்டகல ஆசிரிய கலாசாலை அதிபர் சந்திரலேகா கிங்ஸ்லியும் ஆற்றினர். 
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவக் கற்கைகள் பீடாதிபதி பேராசிரியர் தி.வேல்நம்பி

 
தலைமையில் வள்ளுவர் வழி முகாமைத்துவம் என்ற பொருளில் ஆய்வரங்கம் இடம்பெற்றது. இதில் திருக்குறளில் திட்டமிடல் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளார் கலாநிதி சி.சிவேசனும்இ திருக்குறளில் ஒழுங்கமைத்தல் என்ற பொருளில்  கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் பாரதி கெனடியும் திருக்குறளில் ஆட்சேர்ப்பு என்ற பொருளில் திறந்த பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி வ.சிவலோகதாசனும் திருக்குறளில் வழிநடத்தல் என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணாவும் திருக்குறளில் கட்டுப்படுத்தல் என்ற பொருளில் கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயிலும் உரையாற்றினர். ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல் வள்ளுவர்வழி முகாமைத்துவம் என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. 
 
நூலின் முதற்பிரதியை தொழிலதிபர் கல்விக் காருண்யன் இ.எஸ்பி. நாகரத்தினமும் தேனு களஞ்சிய உரிமையாளர் மோகன்ராசும் பெற்றுக் கொண்டனர். 
 
பாடசாலைகளில் உயர்தரத்தில் தமிழ் கற்கும் மாணவர்களிடையே நடத்தப்பட்ட திருக்குறள் தேர்வு தொடர்பான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது. இதனை போட்டி இணைப்பாளர் விரிவுரையாளர் கு. பாலஷண்முகன் நெறிப்படுத்தினார். நிறைவு நிகழ்வாக கொட்டகலை ஆசிரிய கலாசாலையினர் வழங்கிய உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் என்ற பொருளில் அமைந்த நாட்டிய நாடகம் இடம்பெறும். நளன் தமயந்தி கதையின் சுயம்வரக் காட்சியைக் காட்டிய இந்நாட்டிய நாடகத்திற்குரிய நட்டுவாங்கம் – விரிவுரையாளர் சுமித்தா பிரசாந்தன்இ பாட்டு- ஜெ.மதுசிகன்இ வயலின் – ப.சியாமகிருஷ்ணாஇ மிருதங்கம் – க.நந்தகுமார்  ஆகியோர் பங்கேற்றனர். நன்றியுரையை பொதுச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் நிகழ்ச்சித் தொகுப்பை: சி.சிவஸ்கந்தசிறியும் மேற்கொண்டனர்.
 
Bookmark the permalink.

Leave a Reply