தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதச் சுற்றுப்போட்டி

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் இளையோரின் விவாதத் திறனை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுத்த பாடசாலை மாணவர்களுக்கான விவாதச் சுற்றுப்போட்டி 02.06.2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் சிறப்புற இடம்பெற்றது.

தமிழ்ச்சங்கத்தி;ன் ஆட்சிக் குழு உறுப்பினர் சி.சிவஸ்கந்தசிறியை இணைப்பாளராகக் கொண்டு நடைபெற்ற இப்போட்டியில் பன்னிரண்டு பாடசாலைகள் பங்கேற்றன. போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க முதலாவது விவாதச் சுற்றுப்போட்டி வெற்றிக்கிண்ணத்திற்கு பாத்திரமாகியது. இரண்டாம் இடத்தை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை பெற்றது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான திறந்த போட்டி விரைவில் நடைபெறவுள்ளது.

Bookmark the permalink.

Leave a Reply