தமிழ்ச்சங்கம் நடத்திய திறந்த விவாதச் சுற்றுப்போட்டி-2018

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்படும் விவாதச் சுற்றுப்போட்டியில் திறந்த பிரிவினருக்கான அரையிறுதிப் போட்டிகள் 15.06.2018 வெள்ளிக்கிழமை யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றன. 

பாடசாலை கல்வியை நிறைவு செய்த 35 வயதிற்கு உட்பட்ட ஈழத்து அறிஞர் ஒருவரின் பெயரைத் தாங்கிய ஆறு அணிகள் விவாதப் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் களமிறங்கின. 

புதுவை இரத்தினதுரையின் பெயரில் களமிறங்கிய யாழ். இளைஞர் அணியும் சுவாமி விபுலாநந்தரின் பெயரில் களமிறங்கிய கிழக்கு மாகாண இளைஞர் அணியும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன. 

இறுதிப்போட்டி பல்லோர் முன்னிலையில் விரைவில் நடைபெறவுள்ளது. 

பாடசாலை மாணவர்களுக்குத் தனியாக அண்மையில் இடம்பெற்ற விவாதச் சுற்றுப்போட்டியில் யாழ். இந்துக் கல்லூரி அணி வெற்றியீட்டியிருந்தது.

விவாதப் போட்டிகளின் இணைப்பாளராக சி.சிவஸ்கந்தசிறி செயற்பட்டார்.

Bookmark the permalink.

Leave a Reply