சிறப்புற்ற தனிநாயகம் அடிகள் நினைவரங்கு-2018

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்திய தமிழ்த் தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கு வெகுசிறப்பாக 16.09.2018 அன்று திருமறைக்கலாமன்ற கலைத் தூது அரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் தமிழ் அடையாள உருவாக்கம் திருக்குறளை முன்னிறுத்தி எனும் தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரன் நினைவுரையாற்றினார். நிகழ்வின் நிறைவாக தமிழ்ச் சங்கம் 35 வயதுக்குட்பட்ட இளையவர்களிடையே நடாத்திய விவாதச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சுவாமி விபுலானந்தர் அணியும் தேசக்கவிஞர் புதவை இரத்தினதுரை அணியும் மோதின. இருபத்தோராம் நூற்றாண்டு தமிழை இறுதி செய்யும்  உறுதி செய்யும் எனும் தலைப்பில் அமைந்த இவ் விவாதத்தில் இறுதி செய்யும் எனப் பேசிய சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி பெற்றது.  அவர்களுக்கான வெற்றிக்கேடயத்தை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் வழங்கி வைத்தார். 

Bookmark the permalink.

Leave a Reply