தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுக்கும் நாவலர் விழா 24.11.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நாவலர் வீதியில் உள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கனகசபை அருள்நேசன் தம்பதியர் மங்கல விளக்கேற்றுவர். விஜயதர்சினி தயாளனின் தமிழ்த்தெய்வ வணக்கத்தைத் தொடர்ந்து வரவேற்புரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் நல்குவர்.

நாவலரும் தமிழ்த்தேசியமும் என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளர் கலாநிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு சிறப்புரையாற்றுவார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் கலாநிதி எஸ். ஸ்ரீதர்ஷனன் நாவலர் இசையரங்கை நல்குவார்.

நாவலரின் கனவை நனவாக்குவதில் பெரும்பங்கு வகிப்பது அவரது சமயப் பணிகளா? அல்லது தமிழ்ப்பணிகளா? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைமையில் பட்டிமண்டபம் இடம்பெறும். இதில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்களான தி.செல்வமனோகரன், சி.ரமணன், ஆசிரியர் கு.பாலஷண்முகன், மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா ஆகியோர் வாதிகளாகவும் பிரதிவாதிகளாகவும் பங்கேற்கவுள்ளனர்.

navalar

நிகழ்விற்கான அனுசரணையை யாழ். பெரியகடை சிவகணேசன் ரெக்ஸ்ரைல்ஸ் நிறுவனத்தினரும் மண்டபத்திற்கான அனுசரணையை யாழல். மாநகரசபையினரும் வழங்கியுள்ளனர்.

நிகழ்வு இடம்பெறும் நாவலர் கலாசார மண்டபம் ஆறுமுகநாவலரின் வீடு அமைந்திருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bookmark the permalink.

Comments are closed.