தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் வேல்நம்பிக்கு இரட்டை விருதுகள்…

n1 v2யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி பாங்கொக்கில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். பாண்டிச்சேரியைத் தலைமையகமாகக் கொண்ட விஞ்ஞானிகள் அபிவிருத்தியாளர்கள்; சர்வதேச பீடத்தின் (Association of Scientists, Developers and Faculties) (ASDF) மாநாடு பாங்கொக்கில் உள்ள ஹொலிடே இன் ஐந்து நட்சத்திர விடுதியில் 30.12.2104 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது சிறந்த கல்விசார் பீடாதிபதி மற்றும் சிறந்த கல்விசார் ஆய்வாளர் என்ற இரண்டு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

உலகளாவிய நிலையில் 74 நாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற 9674 விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 27 பேர் மேற்கண்ட வகையில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற எங்கள் தமிழ்ச் சங்கத் தலைவரை  மனமார வாழ்த்துகின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply