தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்நாள் பொருளாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதியுமான சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரவு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020 காலமானார்.
10.04.1942 இல் புத்தூரில் பிறந்த இவர் தற்போது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். திருநெல்வேலியில் பேராசிரியர் வேல்நம்பியின் இல்லத்திலும் தொடர்ந்து நீர்வேலியில் மகளின் இல்லத்திலும் வசித்தார்.
இவரின் இறுதிக் கிரியைகள் நாளை 09.09.2020 புதன்கிழமை காலை 10 மணிக்கு காமாட்சி அம்பாள் கோவிலடி, நீர்வேலி வடக்கு நீர்வேலியில் உள்ள அவர்களது இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
தாயாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளரான பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்ச்சங்கத்தார் சார்பில் ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
Bookmark the permalink.

Leave a Reply