யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக அலுவலர்
பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் பிரபாகரன் அவர்களின்
திடீர்மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு
………………………………………………………………..
யாழ் மண்ணில் இந்தியத் துணைத்தூதரகச் செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்துவதில் முன்னின்று உழைத்த பிரம்மஸ்ரீ ச. பிரபாகரன் திடீரென எம்மை விட்டு மறைந்தமை குறித்து அதிர்ச்சியடைகின்றோம். தமிழ்மொழி மேல் கொண்டிருந்த பற்றின் காரணமாக எமது சங்க அங்கத்தவர்கள் மீதும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் மீதும் மிகுந்த அபிமானம் கொண்டவராக அமரர் பிரபாகரன் விளங்கினார்.
துணைத்தூதரகத்துடன் இணைந்தான சங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதற்கு உறுதுணை புரிந்தார். தொழினுட்பத்துறை வல்லுநராகவும் கலைத்துறை திறனாளராகவும் விளங்கியமையால் தமிழியல் சார்ந்த செயற்பாடுகளை உயர்தொழினுட்பத்திறன்களுடன் முன்னெடுக்க வழிவகுத்தார்.
ஐம்பத்திரண்டு வயதில் இந்த மண்ணைவிட்டு அன்னார் பிரிந்தமை எம்மைப் பொறுத்தவரையில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரது இழப்பால் துயருறும் இந்தியத் துணைத்தூதரகத்தார் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதலைத் தெரிவிப்பதுடன் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் விரைந்து நலம் பெறவும் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக
– யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்
தமிழ்ச்சங்கப் பணிகளுக்கு உறுதுணை செய்த பிரபா ஐயா- தமிழ்ச் சங்கம் இரங்கல்
Bookmark the permalink.