சிறப்புற இடம் பெற்ற சுவாமி ஞானப்பிரகாசரின் பிறப்பின் 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் முப்பொன்விழா யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் , யாழ்ப்பாண மறைமாவட்டம், யாழ் அமலமரித் தியாகிகள் சபை என்பவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கம் – திருமறை கலாமன்றத்தில் கலையரங்கம் என கடந்த 26.10.2025 ஞாயிறு காலை மாலை நிகழ்வுகளாகச் சிறப்புற இடம்பெற்றது

காலை அமர்வு யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல் நம்பி தலைமையில் ஆய்வரங்காக இடம்பெற்றது

இதில் யாழ்ப்பல்கலைக் கழக விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். தமிழ்ச் சங்கச் செயலாளர் சந்திரமௌலீசன் லலீசன் வரவேற்புரை ஆற்றினார்.

யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் அருட் தந்தை பி. ஜெ. ஜெபரட்ணம் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் ஆகியோர் ஆசிரியரை வழங்கினர்

13 ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய முப்பொன்விழா ஆய்வரங்க மலர் வெளியீடு செய்யப்பட்டது. இதனை யாழ் பல்கலைக்கழக மொழியியல் துறை ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி சுபதினி ரமேஷ் வெளியிட்டு வைத்தார்

தொடர்ந்து ஆய்வாளர்களின் ஆய்வுரைகள் இடம் பெற்றன

காலை அமர்வை தமிழ் சங்க ஆட்சிக் குழு உறுப்பினர் யோ. நிவேதன் முன்னிலைப்படுத்தினார்

மாலை அமர்வு திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் முப்பொன் விழாக்குழு இணைத்தலைவர் அருட் தந்தை ஜெரோ செல்வநாயகம் தலைமையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஆசிரியர் இ. ஜெயக்காந்தன் இறை வணக்கம் இசைத்தார் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து இசைத்தனர்

யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் வரவேற்பு நடனம் வழங்கினர்

நிகழ்வில் ஆசிரியரையை யாழ் ஆயர் பேரருட் தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆற்றினார்

தமிழ் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல் நம்பி, அமல மரித் தியாகிகளின் யாழ் மாகாண தலைவர் அருட்தந்தை போல் ஜெயந்தன் பச்சேக் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர்

உரும்பிராய் பங்கு மக்களின் அபிநய பாடல் மானிப்பாய் பங்கு மக்களின் நடனம் யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி சபேசன் நம்சியாவின் உரை திருமறைக் கலாம் என்ற மாணவிகள் சுதர்சினி கரன்சனின் நெறியாள்கையில் வழங்கிய சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் நாட்டிய நாடகம் என்பன இடம் பெற்றன

முப்பொன் விழாவை ஒட்டி யாழ் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம்பெற்றது. இதனை அருட்தந்தை எஸ் ஜே ஜீவரட்ணம் முன்னிலைப்படுத்தினார்

Bookmark the permalink.

Comments are closed.