நல்லை ஆதீனத்தில்  யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய  திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த திருவள்ளுவர் விழா கடந்த வியாழக்கிழமை  13.03.2024 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக தமிழ் சிறப்புக்கலை மாணவன் யோ. நிவேதன் வரவேற்புரை ஆற்றினார். யாழ். பல்கலைக்கழக நடனத்துறை விரிவுரையாளர் இராசையா தனராஜின்  திருக்குறள் நடனம் , பண்டத்தரிப்பு பெண்கள் உயர் கல்லூரித் தமிழாசிரியர் ந. குகபரனின் திருக்குறளில் பண்புற மொழிதல் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கப் பணிகளுக்கு உறுதுணை செய்த பிரபா ஐயா- தமிழ்ச் சங்கம் இரங்கல்

யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்தக்குருக்கள் பிரபாகரன் அவர்களின் திடீர்மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பு ……………………………………………………………….. யாழ் மண்ணில் இந்தியத் துணைத்தூதரகச் செயற்பாடுகளை மக்கள் மயப்படுத்துவதில் முன்னின்று உழைத்த பிரம்மஸ்ரீ ச. பிரபாகரன் திடீரென எம்மை விட்டு மறைந்தமை குறித்து அதிர்ச்சியடைகின்றோம். தமிழ்மொழி மேல் கொண்டிருந்த பற்றின் காரணமாக எமது சங்க அங்கத்தவர்கள் மீதும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் மீதும் மிகுந்த அபிமானம் கொண்டவராக அமரர் பிரபாகரன் … மேலும் வாசிக்க

தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2024

யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம் நடத்தும் தமழ் தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 04 10 2024 வெள்ளி மாலை 4 மணிக்கு யாழ் பிரதான வீதியில் உள்ள திருமறைக்கலாமன்றத்தின் கலைத் தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உப தலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வில் தொடக்கவுரையை தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி. வேல்நம்பியும் வாழ்த்துரையை தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாசும் மாணவர் உரையை … மேலும் வாசிக்க

சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் இன்றையதினம்(17) காலை 11.30 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச் சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் நவாலியூர் சோமசுந்தர புலவரின் திருவுருவச் சிலைக்கும் பாடசாலை நிறுவுனர் பண்டிதர் தம்பையாவின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கி. கிருஷ்ணானந்தா வாழ்த்துரையையும், ஜீவா. சஜீவன்  தொடக்கவுரையையும் வழங்கினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர், செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றினார்.  பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் தமிழ் சங்க பொதுச் செயலாளர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன், யாழ்ப்பாணம் மறைக்கோட்ட முதல்வரும் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமாகிய அருட்பணி ஜெரோ செல்வநாயகம், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர்களான கலாநிதி விஜயபாஸ்கர், ம. சத்தியகுமார், இ. சர்வேஸ்வரா நடனத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி கி. அருட்செல்வி தமிழ்ச் சங்க பொருளாளர் லோ. துஷிகரன் ஆட்சிக் குழு உறுப்பினர்காளான ந. ஐங்கரன் , செ. நிவேதன்,  விரிவுரையாளர் வேல் நந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழாவும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் 17.07.2024 புதன்கிழமை காலை 11 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் கி. கிருஷ்ணானந்தா வாழ்த்துரையையும் ஜீவா. சஜீவன் தொடக்கவுரையையும் வழங்குவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர்; செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் ஆடிப்பிறப்பும் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றுவார். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்றது

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழுத் தெரிவு சங்கத்தின் பெருந்தலைவர் வாணாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமையில் 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தற்காலிக அலுவலகம் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சிறாம்பியடி ஒழுங்கையில் உள்ள கொசி விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. இதில் பின்வரும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் புதிய நிர்வாகக் குழுவிற்காக கடந்த ஆட்சிக்குழுவின் பரிந்துரை அடிப்படையிலும் பொதுக்கூட்டத்தி;ற்குச் சமுகமளித்தோரில் இருந்தான தெரிவின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டனர். பெருந்தலைவர் : பேராசிரியர் அ. … மேலும் வாசிக்க