பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு

மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாளான 11.12.2021 சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் அரசடியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் வணக்கம் செலுத்தப்பட்டது.
கொவிட் பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகக் கைக்கொண்டு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்தியத் துணைத்தூதர் ராகேஸ் நட்ராஜ், யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன், யாழ். மாநகர ஆணையாளர் கவிஞர் த. ஜெயசீலன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன், ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலசண்முகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் மலர்கள் அர்ப்பணித்தும் வணக்கம் செலுத்தினர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இந்நிகழ்வு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இந்தியத் துணைத்தூதரகமும் இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டின் பின்னர் கொவிட் நெருக்கடி காரணமாக இணைந்து நிகழ்வு முன்னெடுக்கப்படவில்லை.
 
 
 

Bookmark the permalink.

Leave a Reply