தமிழ்த் துறைப் பேராசிரியரான கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தனுக்கு தமிழ்ச்சங்கத்தின் வாழ்த்துக்கள்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் பேராசிரியராகப் பதிவியுயர்வு பெற்றுள்ள கலாநிதி ஸ்ரீ பிரசாந்தனுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்புப் பட்டம் பெற்று பின்னர் ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகக் கடமையாற்றி பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்றவர். அகில இலங்கை கம்பன் கழகத்தின் அமைப்பாளராகச் செயற்படும் இவர் தமிழ் உலகம் நன்கறிந்த பேச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் மேலும்உயர்வுகள் பெற்று தமிழ் உலகத்துக்கு பணியாற்ற தமிழ்த்தாயின் ஆசி வேண்டி வாழ்த்துகின்றோம். 

Bookmark the permalink.

Leave a Reply