உலகத் தாய்மொழி நாள் விழா-2020

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய உலகத் தாய்மொழி நாள் விழாவும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை நினைவரங்கமும் இன்று 20 02 2020 சாவகச்சேரி இந்துக் கல்லூரி பிரதான மண்டபத்தில் அதிபர் ந. சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் உலகத் தாய்மொழி நாள் குறித்த சிறப்புரையை தமிழ்ச் சங்கத்தின்  பெருந்தலைவர் பேராசிரியர் அ. சண்முகதாஸும் உயர்தர மாணவருக்கான திருக்குறள் பாடப்பகுதி குறித்த கண்ணோட்ட உரையை தமிழ்ச் சங்கத்தின் உபதலைவர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை குறித்த சிறப்புரையை தமிழ்ச் சங்கத்தின் தலைவர் ச.லலீசனும் நிகழ்த்தினர்.

Bookmark the permalink.

Leave a Reply