யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினர் புலவர் அரியநாயகம் இன்று 12.08.2020 புதன்கிழமை காலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14.08.2020 நெடுந்தீவில் நடைபெறவுள்ளது. அமரரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 13.08.2020 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அமரரது இல்லத்தில் வைக்கப்படும்.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுள் அங்கத்தவரான புலவர் திருநாவுக்கரசு அவர்கள் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்பதுடன் தமிழ்ச் சங்க செயற்பாடுகளுக்கு குறிப்பாக தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா ஏற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழையும் தமிழ்ச் சங்கப் பணிகளையும் நேசித்த புலவருக்கு எமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்.