தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

புலவர்மணி வை.க. சிற்றம்பலம் எழுதிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று 27.02.2021 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு திருநெல்வேலி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள அறிவாலயம் அரங்கில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் கு.பாலசண்முகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார்.
தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் தொடக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் எஸ். சிவலிங்கராசா நூல் பற்றிய நயப்புரையை ஆற்றினார். புலவரின் ஆர்வலர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
புலவர் வை.க. சிற்றம்பலம் இணுவிலில் பிறந்தவர். அளவெட்டியைத் தமது புக்ககமாகக் கொண்டிருந்தார். 1914 இல் பிறந்த இவர் 2015 வரை (101 வயது வரை) வாழ்ந்தார். முப்பதுக்கும் மேற்பட்ட பிரபந்த (சிற்றிலக்கிய) நூல்களை ஆக்கியுள்ளார்.
Bookmark the permalink.

Leave a Reply