இணையவழியில் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா இன்று (17.07.2021) இரவு 8 மணிக்கு சூம் செயலி வழியாக நடைபெறவுள்ளது.
தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் துணவியூர் சி. கேசவன், ஆடிப்பிறப்பின் மகத்துவம் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றுவார். தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கு. பாலசண்முகன் வரவேற்புரையையும் செயலாளர் இ.சர்வேஸ்வரா நிறைவுரையையும் வழங்கவுள்ளனர். நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான அடையாள எண்- 673 6217 6791 கடவுச்சொல் – Tamil@123
 
Bookmark the permalink.

Leave a Reply