சைவத் தமிழின் செழுமையைப் பேண உழைத்த பெருந்தகை சைவப்புலவர் சு.செல்லத்துரை

சைவப்புலவர் சு.செல்லத்துரை ஐயா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தியறிந்து யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த துயரம் அடைகின்றது. எமது சைவத் தமிழின் செழுமைக்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்ட ஆற்றலாளர் அமரர் அவர்கள். பாரம்பரியக் கல்வி முறைகளுக்குள்ளால் தமிழையும் சைவத்தையும் கற்றுத் தேர்ந்த சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் தான் கற்றுவந்த பாதைகளின் ஊடாகவே தமிழைப் பாதுகாப்பதிலும் பங்களிப்புச் செய்தவர். ஈழமண்ணில் தமிழ் நிலைத்திருப்பதற்கு சைவத்தின் வியாபகம் அவசியமானது எனும் பெரும் உண்மையை … மேலும் வாசிக்க

தமிழ்க் கடவுள் ஆலயத்தின் தலைமகனுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி

நல்லூர் கந்தன் ஆலயத்தின் தலமை நிர்வாகி குமாரதாஸ மாப்பாண முதலியார் இயற்கை எய்திய செய்தி உலகம் வாழ் தமிழ் மக்களுக்கு கவலை தரும் செய்தி. அவரது வாழ்வும் அவ் வாழ்வில் அவர் கடைப்பிடித்த நெறிமுறையும் யாழ்ப்பாண தமிழர்களின் வரலாற்றை எழுதும் போது தனித்தன்மை மிக்க அடையாளமாகத் திகழும். தமிழர்கள் தங்கள் தாய்ப்பூமியின் தலைநகராக யாழ்ப்பாணத்தையும் அதன் இதயமாக நல்லூரையும் கொண்டாடவிளையும் மற்றும் ஆவணப்படுத்தும் எண்ணங்களுக்கு சொல்லிலும் செயல் பெரிது என … மேலும் வாசிக்க

இணையவழியில் தமிழ்ச்சங்கம் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் இணையவழியில் நடத்தும் ஆடிப்பிறப்பு விழா இன்று (17.07.2021) இரவு 8 மணிக்கு சூம் செயலி வழியாக நடைபெறவுள்ளது. தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் துணவியூர் சி. கேசவன், ஆடிப்பிறப்பின் மகத்துவம் என்ற பொருளில் சிறப்புரை ஆற்றுவார். தமிழ்ச்சங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் கு. பாலசண்முகன் வரவேற்புரையையும் செயலாளர் இ.சர்வேஸ்வரா நிறைவுரையையும் வழங்கவுள்ளனர். நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான … மேலும் வாசிக்க

உலகத்திசைகளுக்கு தமிழர் பாரம்பரிய கலைவடிவங்களைக் காவிச்சென்றவர் கலைத்தூது கலாநிதி மரியசேவியர் அடிகளார்

கலைத்தூது மரியசேவியர் அடிகளார் மறைந்து விட்டார் எனும் செய்தி மிகப் பெரும் கவலையாக ஈழத்தமிழ்ச் சமூகத்தில் பரவிநிற்கின்றது. திருமறைக் கலாமன்றம் எனும் அமைப்பைத் தாபித்து அதன் மூலம் உலகின் பல பாகங்களுக்கும் தமிழர்களின் கலைவடிவங்களை காவிச் சென்றவர் கலைத்தூது மரியசேவியர் அடிகளார். தனது நிர்வாகத் திறத்தினாலும் கலையாற்றலினாலும் திருமறைக் கலாமன்றம் எனும் காத்திரமான தனித்துவமான ஒரு கலைஅமைப்பை நிறுவி ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அவ் அமைப்பை தளராது முன்னோக்கி வளர்ச்சிப் … மேலும் வாசிக்க

தமிழர் இசைவடிவத்தின் காவலரான கணபதிப்பிள்ளை ஐயா காலத்தால் மறக்கமுடியாத கலைப் பொக்கிசம்

ஈழத்தமிழர்களின் இசைப்பாரம்பரியத்தின் குறிப்பிடத்தக்க விற்பன்னராகத் திகழ்ந்த சங்கீதபூசணம் கணபதிப்பிள்ளை ஐயா காலமான செய்தி கவலைதரும் விடயமாகவுள்ளது. யாழ்ப்பாணத் தமிழர்களின் கலைப்பாரம்பரியத்தில் குறிப்பாக இசைப்பாரம்பரியத்தில் கணபதிப்பிள்ளை ஐயாவுக்கு காத்திரமான இடமுண்டு. இசைத்துறைக்காக அத்துறை சார்ந்த கலைஞராகவும் கல்வி நிர்வாகியாகவும் அவர் ஆற்றிய பணிகள் அற்புதமானவை. இன்று எமது மண்ணில் இசைத்துறையைப் போதிக்கும் இசையாசிரியர்கள் பலர் அவருக்கு ஏதொவொரு வகையில் நன்றிக்கடன் பட்டவர்களாகவேயிருப்பார்கள். வட இலங்கை சங்கீத சபையின் பணிகளில் வினைத்திறனுடன் பணியாற்றிய … மேலும் வாசிக்க

உலகத் தமிழ்ச்சங்கத்தின் இலக்கண விருது பெறுகிறார் பேராசிரியர் அ.சண்முகதாஸ்

  தமிழ் நாடு அரசு உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் சார்பில் இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறைகளில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு ஆண்டு தோறும் உலகத் தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டிற்கான உலகத் தமிழ்ச் சங்க இலக்கண விருது யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியருமாகிய பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இவ்விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவுள்ளதாகவும் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடு

புலவர்மணி வை.க. சிற்றம்பலம் எழுதிய இணுவில் சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் என்ற நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று 27.02.2021 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு திருநெல்வேலி யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள அறிவாலயம் அரங்கில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் கு.பாலசண்முகன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தார். தமிழ்ச்சங்கச் செயலர் விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா வரவேற்புரையாற்றினார். தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசன் … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இந்நாள் பொருளாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ வணிக கற்கைகள் பீட முன்னாள் பீடாதிபதியுமான சிரேஸ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி அவர்களின் அன்புத் தாயார் யோகமணி திருநாவுக்கரவு இன்று செவ்வாய்க்கிழமை காலை 08.04.2020 காலமானார். 10.04.1942 இல் புத்தூரில் பிறந்த இவர் தற்போது பிள்ளைகளுடன் வசித்து வந்தார். திருநெல்வேலியில் பேராசிரியர் வேல்நம்பியின் இல்லத்திலும் தொடர்ந்து நீர்வேலியில் மகளின் இல்லத்திலும் வசித்தார். இவரின் இறுதிக் கிரியைகள் நாளை … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினர் புலவர் அரியநாயகம் காலமானார்.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுட்கால உறுப்பினர் புலவர் அரியநாயகம் இன்று 12.08.2020 புதன்கிழமை காலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை 14.08.2020 நெடுந்தீவில் நடைபெறவுள்ளது. அமரரது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 13.08.2020 வியாழக்கிழமை யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள அமரரது இல்லத்தில் வைக்கப்படும்.  யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்க ஆயுள் அங்கத்தவரான புலவர்  திருநாவுக்கரசு அவர்கள் ஓய்வுபெற்ற  ஆசிரியர் என்பதுடன் தமிழ்ச் சங்க செயற்பாடுகளுக்கு குறிப்பாக … மேலும் வாசிக்க

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் இணையவழிக் கருத்தரங்குகள்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழக அரசின் மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுக்கும் இணையவழிக் கருத்தரங்குகள் எதிர்வரும் 27 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரை வார நாள்களில் இடம்பெறவுள்ளது. இலங்கைத் தமிழும் தமிழரும் என்ற மையப்பொருளில் இடம்பெறும் இக்கருத்தரங்கில் இலங்கைத் தமிழரின் நிலை, இலங்கைத் தமிழ் இலக்கியம், இலங்கையில் தமிழர் கல்வி, இலங்கைத் தமிழ்க்கலைகள், இலங்கைத் தமிழ் ஊடகங்கள் என்ற பொருண்மைகளில் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் … மேலும் வாசிக்க