சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற இடம்பெற்றது. நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து சரவணை நாகேஸ்வரி … மேலும் வாசிக்க

திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் – கருத்தரங்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாண முகாமையாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் என்ற பொருளில் அமைந்த கருத்தரங்கு 14.05.2014 புதன்கிழமை நல்லூர் யூரோவில் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் டிஎப்சிசி வர்த்தக வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் எஸ்.ரவீந்திரா வரவேற்புரையையும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வாழ்த்துரையையும் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் நெறிப்படுத்தலில் … மேலும் வாசிக்க

வடபுலத்தில் தமிழ் வளர்க்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தொடர்பில் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை….. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் தென்மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் கடைச்சங்கம் தற்போதைய மதுரையிலும் இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாற்றாசிரியர்கள் சுட்டுவர். பாண்டியரைத் தொடர்ந்து சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் முயற்சி யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாண அரசர்கள் (ஆரியச் சக்கரவர்த்திகள்) எம்மண்ணை ஆண்ட காலத்தில் நல்லூரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்ததாகக் கூறுவர். காப்பியம் புனையும் … மேலும் வாசிக்க

கவிதைப் பட்டறை

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையும் இணைந்து நடாத்தும் கவிதைப்பட்டறை நிகழ்வு எதிர்வரும் 26.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. துறைசார் வளவாளர்களால் வழங்கப்படவுள்ள இக் கவிதைப்பட்டறையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்ளலாம். அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் தயவுசெய்து கலந்துகொள்ள விரும்புவர்கள் தமது பெயர் மற்றும் மாணவராயின் பாடசாலை அல்லது வதிவிட முகவரியை 0778449739 என்ற தொலைபேசி … மேலும் வாசிக்க

நல்வைநகர் நாவலர்

ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 – டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர்.யாழ்ப்பாணம், நல்லூரில்தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர்.திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம்,பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். தோற்றம் ஆறுமுக நாவலர்யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி 5)புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் … மேலும் வாசிக்க

மதுரைப் பண்டிதர் சச்சிதானந்தன்

மிகச் சிறந்த கவிஞன் தமிழறிஞர் ஆங்கிலத்திலும் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர் உளநூல் கல்வி நூல் விற்பன்னர் பண்டிதர் பீ.எ. எம்.பில் முதலான பல பட்டங்களைப் பெற்றவர் பலாலி ஆசிரியர் கலாசாலையில் உபஅதிபராயிருந்து ஓய்வு பெற்றவர் சுவாமி விபுலானந்தர் யாழ்நூல் உருவாக்கிய காலத்தில் அவருடன் இருந்து ஆய்வுகளுக்கும் எழுத்துப்பணிக்கும் உதவிய பெருமைக்குரியவர் கீழைத்தேய மேலைத்தேய இருவழிக்கல்வியிலும் ஈடுபாடும் புலமையும் மிக்கவர். கவிதை சிறுகதை நவீனம் காவியம் முதலாம் பல்துறை இலக்கியத்துறை படைத்த … மேலும் வாசிக்க

அளவெட்டிப் பண்டிதர் க. நாகலிங்கம்

பண்டிதர் க.நாகலிங்கம் அவர்கள் அளவெட்டியில் வாழ்ந்த கனகர் சின்னப்பிள்ளை தம்பதிக்கு ஏக புதல்வனாக 1920 ஆம் ஆண்டு மார்ச் நாலாந்தேதி பிறந்தார். இவருக்குப் பின்னே தங்கையாக ஒருவர் தோன்றியதுண்டு. தாய் தந்தையருடன் பண்டிதரும் தங்கையுமாக நால்வர் சேர்ந்ததே இவர்கள் சிறிய குடும்பமாகும். பண்டிதர் அளவெட்டி வடக்கு சீனன் கலட்டி ஞானோதயா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடரும் படியாகச் சேர்க்கப்பட்டார். அங்கு நான்காவது வரை கற்றவர் தொடர்ந்து ஆங்கில மொழிக் கல்வியைப் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பியின் வாழ்த்து…

இணையத்தால் எம் தமிழ் வளர்ப்போம் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் ஈழத்தமிழரின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் தமிழ் உணர்வும்,தமிழ்ப்பற்றும், தமிழறிவும் வளர்ந்திட வேண்டும் என்று உன்னதமான குறிக்கோளுடன் செயற்படுகிறது. தமிழ் மொழியின் தொன்மையையும் மேன்மையையும்,பண்பாட்டுச் செழுமையும் இளந்தலைமுறையினர் உயிர்ப்புடன் உணர்ந்து குதூகலிக்கவும் கொண்டாடவும் வழிசமைத்து வருகிறது.தமிழ்மொழியின் இயற்றமிழ்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த  அறிவுசார் ஆற்றலை சமூக மட்டத்தில் வளர்ப்பது எமது தமிழ்ச்சங்கத்தின் இலக்காகும். தாய்மொழியாம் தமிழ்மொழி தமிழர் பண்பாடு என்ற இயங்கும் சக்கரத்தின் மையவிசையாகும். பண்பாட்டை … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க உபதலைவர் பேராசிரியர். கி.விசாகரூபனின் வாழ்த்து..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்துக்கு நீண்ட ஒரு வரலாறு உண்டு. 1900 களில் உருவாக்கப்பட்ட இச்சங்கம் சிலகாலம் உயிர்த்துடிப்புடன் இயங்கிப் பின்னர் செயலிழந்து போனது. சைவத்துக்கும் தமிழுக்கும் பேர் போன யாழ்ப்பாணத்தில் தமிழை வளர்த்திடத் தமிழ்ச் சங்கம் ஒன்று இல்லாத குறையைத் தமிழார்வலர்கள் பலரும் உணர்ந்து கொண்டதன் பயனாக 2011 இல் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது. தமிழ்மொழி தமிழர் பண்பாடு குறித்த நெயற்றிட்டங்களை முன்னெடுத்து அவற்றுக்கீடாகத் தமிழ்மொழியை அதன் பெருமையைää வளமையை … மேலும் வாசிக்க

தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியின் அகத்தின் கண்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் தேவைகள் என்பன குறித்து உலகத் தமிழர்களோடு காணொளி மூலம் இணைகின்றார் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி. அவரது கருத்துக்களைக் காணும் தாங்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடனும் அதனை பரிமாறுங்கள். தங்களால் இயன்ற பங்களிப்பையும் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக்குங்கள். தங்கள் பங்களிப்பு தமிழ்ச் சங்கத்தின் வழி எங்கள் இனத்தை வாழ்விக்கும். யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தனது தமிழ் வளர்க்கும் பணியில் நீண்டு … மேலும் வாசிக்க