யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையும் இணைந்து நடாத்தும் கவிதைப்பட்டறை நிகழ்வு எதிர்வரும் 26.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. துறைசார் வளவாளர்களால் வழங்கப்படவுள்ள இக் கவிதைப்பட்டறையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்ளலாம். அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் தயவுசெய்து கலந்துகொள்ள விரும்புவர்கள் தமது பெயர் மற்றும் மாணவராயின் பாடசாலை அல்லது வதிவிட முகவரியை 0778449739 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு குறுந்தகவலிடவும். பங்குபற்றுனர்கள் அனைவருக்கும் பங்குபற்றியமையை உறுதிப்படுத்தி சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. பாடசாலை மாணவர்கள் அதிபரின் உறுதிப்படுத்தலுடன் பாடசாலைகளுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட படிவங்களில் விண்ணப்பிக்கவும்.
தளத்தின் அகத்தே
-
பதிவுகள்
- நல்லை ஆதீனத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்திய திருவள்ளுவர் விழா
- தமிழ்ச்சங்கப் பணிகளுக்கு உறுதுணை செய்த பிரபா ஐயா- தமிழ்ச் சங்கம் இரங்கல்
- தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2024
- சிறப்புற நடைபெற்ற தமிழ்ச் சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழா
- தமிழ்ச்சங்கத்தின் ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப் புலவர் நினைவரங்கமும் நவாலியில்
- யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு பதவி ஏற்றது
- தமிழ்ச்சங்கத்தின் முப்பெரும் நிகழ்வுகள்
- அமரர்.திருமதி.மேனகா தனபாலசிங்கம் அவர்களுக்கு தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலிகள்
- காரை கவிஞர் வடிவழகையனின் கவிதை நூல்களின் வெளியீட்டு விழா
- பாரதியார் பிறந்தநாளில் தமிழ்ச் சங்க வழிபாடு
மேனாள் தலைவரின் அகத்தின் கண்…
கருத்துமையம்