தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நினைவரங்கம் யாழ். திருமறைக் கலாமன்ற கலைத்தூது கலையகத்தில் தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தனியாகம் அடிகளின் உருவச்சிலைக்கு அருட்பணி ஜெறோ அடிகளாரும் தமிழ்ச்சங்கத் தலைவர் ச.லலீசனும் மலர் மாலை அணிவித்தனர். சியன தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் சி. கேசவன் நினைவுப் பேருரையாற்றினார். தமிழ்ச்சங்கம் நடத்திய விவாதப் போட்டிக்கான இறுதிப் போட்டியும் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்ச்சங்கப் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற சிவபூமிக் கலைநிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்பட்ட சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டன. தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு.திருமுருகன் ஆசியுரையை வழங்கியதுடன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் … மேலும் வாசிக்க

சிவபூமி அருட்காட்சியகத்தில் தமிழ்ச் சங்க நிகழ்வுகள்

சிவபூமி அறக்கட்டளையினரால் 25.01.2020 அன்று திறந்து வைக்கப்படவுள்ள சிவபூமி அருட்காட்சிய திறப்பு விழாவை சிறப்பிக்கும் பொருட்டு யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தால் திறப்பு விழாவின் இரண்டாம் நாளான 26.01.2020 ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கலைநிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நிகழ்வுகள் குறித்த விபரங்களை கீழே உள்ள அழைப்பிதழில் காணலாம்.  மேலும் வாசிக்க

சிறப்புற்ற நாவலர் விழா -2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும், கரிகணன் அச்சகத்தாரும் இணைந்து நடாத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவரங்க விழா நேற்றுச் சனிக்கிழமை(30-11-2019)காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்புற நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் உபதலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விழாவில் யாழ். இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் பெருமானின் திருவுருவச் சிலைக்கு வழிபாடுகள் நடைபெற்றன. செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், யாழ்ப்பாணத் … மேலும் வாசிக்க

கலாநிதி க.சிவராமலிங்கம்பிள்ளை ஞாகார்த்த பாடசாலை மட்ட விவாதச் சுற்றுப்போட்டி– 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப்போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாகநடத்தப்படும். பாடசாலைமாணவர்களுக்கானது திறந்தபோட்டி– 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிமுறைகள் ஒருஅணியில் ஐவர் இடம் பெறவேண்டும் போட்டியில் மூவர் பங்குபற்றுவர். இருவர் காத்திருப்புபட்டியலில் இருப்பர். தெரிவுப் போட்டிகளுக்கான தலைப்புக்கள் முன்னரே வழங்கப்படும். ஆனால் போட்டித் தினத்தன்று வழங்கப்பட்ட தலைப்புக்களில் ஒன்று நடுவர்களால் முடிவுசெய்யப்பட்டு வழங்கப்படும். அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கான … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்தும் திறந்த பிரிவு விவாதச் சுற்றுப்போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் இளையவர்களின் விவாதத் திறனை வளர்க்கும் நோக்கில் விவாதச் சுற்றுப் போட்டியொன்றை நடத்தவுள்ளது. போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்படும். பாடசாலை மாணவர்களுக்கானது திறந்த போட்டி – 35 வயதுக்குட்பட்டவர்களுக்கானது போட்டி தொடர்பான விதிமுறைகள் திறந்த பிரிவினருக்கான போட்டி விதிமுறைகள் 35 வயதுக்குட்பட்ட பாடசாலையை விட்டு விலகிய இருபாலாரும் பங்குபற்றலாம். (30.09.1984 க்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும்) ஒரு அணியில் ஐவர் இடம்பெற வேண்டும் போட்டியில் மூவர் … மேலும் வாசிக்க

சைவம் தழைத்தோங்க நிறைவு நிகழ்வு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சிக் குழுமமும் இணைந்து முன்னெடுத்த சைவம் தழைத்தோங்க நிகழ்ச்சியின் நிறைவு நாள் நிகழ்வுகள் கடந்த 30.09.2019 நல்லூர்க் கந்தன் தீர்த்தத் திருவிழா நாளில் இடம்பெற்றது. நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், உபதலைவர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ். டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ். குகநாதன், தமிழ்ச்சங்கத் தலைவர் ச. லலீசன், செயலாளர் இ.சர்வேஸ்வரா, இசைப்பேரறிஞர் கலாநிதி நா.வி.மு. நவரத்தினம் நிறைவு நிகழ்வுக்கான பரிசுக் கொடையாளர் செல்லத்துரை … மேலும் வாசிக்க

நல்லூரில் டான் தொலைக்காட்சி – தமிழ்ச்சங்கம் இணைந்து சைவம் தழைத்தோங்குக செயற்பாடு

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் டான் தொலைக்காட்சியின் ஓம் தொலைக்காட்சி அலைவரிசையும் இணைந்து முன்னெடுக்கும் சைவத்தழைத்தோங்குக செயற்பாட்டின் தொடக்க நாள் நிகழ்வுகள் 06.08.2019 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு ஆரம்பமாகின.  . இந் நிகழ்வு தொடர்ந்து ஓம் தொலைக்காட்சியின் ஊடாக நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டவண்ணமுள்ளது.  . நல்லூர் ஆலயத்திற்கு அருகில் பருத்தித்துறை வீதி கோவில் வீதி சந்திக்குச் சமீபமாக (லிங்கம் கிறீம் ஹவுஸ் அருகாக) டான் தொலைக்காட்சியின் கலையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு 7 … மேலும் வாசிக்க

சிறப்புற்ற ஆடிப்பிறப்பு விழா -2019

 யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடத்திய ஆடிப்பிறப்பு விழாவும் சோமசுந்தரப்புலவர் நினைவரங்கமும் 16.07.2019 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு நவாலி மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தமிழ்ச் சங்க உறுப்பினர்  ஐீவா.சஐீவன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் புலவரின் சிலைக்கு தமிழ்ச் சங்க பெருந்தலைவர் தகைசார் பேராசி்ரியர் அ.சண்முகதாசும் பாடசாலை நிறுவுனரின் சிலைக்கு பாடசாலை அதிபர் திரு.கிருஸ்ணாணந்தாவும் மாலை அணிவித்தனர். தொடர்ந்து இறைவணக்கம் தமிழ்த் தெய்வ வணக்கத்தை நவாலி மகாவித்தியாலய மாணவிகள் நிகழ்த்தினர். வரவேற்புரையை … மேலும் வாசிக்க