கலாவிநோதன் சின்னமணி ஞாபகார்த்த வில்லுப்பாட்டுப் போட்டி

  கலாவிநோதன் க.கணபதிப்பிள்ளை (சின்னமணி) நினைவாக யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வடக்கு மாகாணம் தழுவிய நிலையில் வில்லுப்பாட்டுப் போட்டிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.   இப்போட்டியில் தற்போது பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அணியாகவோ அல்லது தாங்கள் அங்கத்துவம் பெறும் அறநெறிப்பாடசாலை அல்லது கலை அமைப்புக்கள் மன்றங்களின் ஊடாகவோ பங்கு பற்ற முடியும். . அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கு அமைவாகவே இப் போட்டிகள் … மேலும் வாசிக்க

திருக்குறள் வினாடி வினாப் போட்டி – 2019

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் – சிவகணேசன் புடைவையகம் இணைந்து நடத்தும் வள்ளுவர் விழாவை முன்னிட்ட உயர்தர கலைப்பிரிவு மாணவர்களுக்கான திருக்குறள் வினாடி வினாப் போட்டி– 2019 (எழுத்துத் தேர்வு வகையானது) போட்டி விதி முறைகள் • இப் போட்டியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்கள் பங்குபற்ற முடியும். (பாடசாலை ஊடான மீள் பரீட்சார்த்திகள் உட்பட) … மேலும் வாசிக்க

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து தமிழ்ச்சங்கம் தமிழியல் பணி

வடக்கின் தமிழ்ப்பாட மேம்பாட்டிற்கு வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுடன் இணைந்து யாழ். தமிழ்ச்சங்கம் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. வடக்கு மாகாணத்தின் தமிழ்ப்பாட மேம்பாட்டிற்காக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயன்தரக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுப்பதென வடமாகாணக் கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க முக்கியத்தர்களுக்கும் இடையில் (17.01.2019 புதன்) நடைபெற்ற கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா.கந்ததாசன், மாகாணப் … மேலும் வாசிக்க

யாழ். நல்லூர் சிலப்பதிகார விழாவின் முதல்நாள் மாலை அமர்வு

யாழ். நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு திருவையாறு தமிழ்ஐயா கல்விக் கழகமும் இணைந்து முன்னெடுக்கும் சிலப்பதிகார விழாவின் மாலை அமர்வு (19.01.2019) பிற்பகல் 4.30 மணிக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்தை யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவன் ஜெ.மதுசிகன் இசைத்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கு.பாலசண்முகன் வரவேற்புரையையும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் வீ.கருணலிங்கம் வாழ்த்துரையையும் … மேலும் வாசிக்க

நல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள்விழா (19.01.2019) காலை அமர்வு

சனிக்கிழமை காலை 9 மணிக்கு தமிழ்நாடு திருவையாறு தமிழ்ஐயா கல்விக் கழகத் தலைவர் அவ்வை அடிப்பொடி முனைவர் மு.கலைவேந்தன் தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர். இசைத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சுகன்யா அரவிந்தன் சிலப்பதிகார வாழ்த்து இசைத்தார்.  தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம் வரவேற்புரையாற்றினார். தமிழ்ச்சங்க உபதலைவர் அருட்பணி ஜெறோ … மேலும் வாசிக்க

நல்லூர் சிலப்பதிகார விழா நிறைவு நாள் நிறைவு அமர்வு

மாலை அமர்வு (19.01.2019) சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு தமிழ்ச்சங்க உபதலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில்  நடைபெற்றது. நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் சிலப்பதிகார வாழ்த்து என்பவற்றை கோப்பாய் ஆசிரிய கலாசாலை இசைத்துறை மாணவி மு.பிரவீணா வழங்கினார். வரவேற்புரையை தமிழ்ச்சங்க உபசெயலர் செல்வஅம்பிகை நந்தகுமாரனும் வாழ்த்துரையை யாழ். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதனும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கப் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் ஆற்றினர். தொடர்ந்து பிரபல தமிழக சொற்பொழிவாளர் … மேலும் வாசிக்க