யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் விழா-2019

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், யாழ்.சிவகணேசன் புடைவையகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கும் திருவள்ளுவர் விழா எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

சிறப்பு நிகழ்வாக பட்டிமண்டபம் இடம்பெறவுள்ளது. இதில் இலக்கியச்சுடர் த.இராமலிங்கம் (தமிழ்நாடு) நடுவராகக் கலந்து கொள்கிறார். யாழ். மற்றும் தமிழகப் பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். வடமாகாண ஆளுநர் முனைவர் சுரேன் இராகவன் முதன்மையுரை ஆற்றவுள்ளார்.

இவ்வாண்டும் திருவள்ளுவர் விழாவையொட்டி உயர்தரப் பள்ளி மாணவரிடையே திருக்குறள் தேர்வு நடைபெறவுள்ளது. எதி்வரும் 02.03.2019 சனிக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. 
(அழைப்பிதழ் வடிவமைப்பு – நன்றி தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் ந.ஐங்கரன்)

Bookmark the permalink.

Leave a Reply