யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி நினைவரங்கம்

Barathy Vila 2017யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடத்தும் பாரதி நினைவரங்கம்  எதிர்வரும் 30.12.2017 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லை ஆதீன கலாமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை வேல்.நந்தகுமாரும் தொடக்கவுரையை தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசும் ஆற்றுவர்.
தென்கிழ்க்கு பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் பாரதியும் இயற்கையும் என்ற பொருளில் உரையாற்றுவார்.
தொடர்ந்து கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற பொருளில் கவியரங்கம் இடம்பெறும். இக்கவியரங்கில் கவிஞர்களான த.ஜெயசீலன், கு.றஜீபன், இ.சு.முரளிதரன், தர்மினி றஜீபன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். சி.சிவஸ்கந்தஸ்ரீ நன்றியுரை ஆற்றுவார்.

Bookmark the permalink.

Leave a Reply