தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும்  11.03.2018   ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நல்லை ஆதீனக் கலாமண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் புதிய நிர்வாகத் தெரிவு, யாப்புச் சீர்திருத்த அறிக்கை முன்மொழிதல் முதலிய விடயங்கள் இடம்பெறவுள்ளன எனப் பொதுச் செயலாளர் ச.லலீசன் அறிவித்துள்ளார். மேலும் ஆயுள் அங்கத்தவர்களுக்கும் நடப்பு ஆண்டில் உறுப்புரிமைக்கு உரித்துடைய வருட அங்கத்தவர்களுக்குமான  கூட்ட அழைப்புக் கடிதம் அஞ்சலிடப்பட்டு விட்டதாகவும் கடிதம் கிடைக்காதோரைத் தம்முடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

Bookmark the permalink.

Leave a Reply