யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் திருவாசக முற்றோதல்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் 12.01.2019 சனி காலை முதல் மதியம் வரை திருவாசக முற்றோதல் சிறப்புற இடம்பெற்றது. தமிழ்ச் சங்கத்துக்கு நிரந்தர காணி மற்றும் கட்டடம் அமைய வேண்டும் எனும் பிரார்த்தனையை முன்வைத்து இவ் திருவாசக முற்றோதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. அமரிக்க ஹாவாய் ஆச்சிரமத்தைச் சேர்ந்த தொண்டுநாத சுவாமிகள் ஆசியுரை வழங்கியதுடன் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் தமிழ்ச் சங்கத்தின் உபதலைவருமான கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் சிறப்புரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

Bookmark the permalink.

Leave a Reply