தமிழ்ச் சங்க காப்பாளர் பேராசிரியர் சண்முகதாசுக்கு வாழ்த்துக்கள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கக் காப்பாளர் வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அகவை எழுபத்தைந்தை அடைந்தார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு நற்பணியாற்ற தமிழ்த்தாய் துணை நிற்க பிரார்த்திக்கின்றோம்.  வாழ்த்துக் கவியாக்கம்  செந்தமிழ் சொல்லருவி ச.லலீசன் – பொருளாளர் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் வேல்நம்பிக்கு இரட்டை விருதுகள்…

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி பாங்கொக்கில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளார். பாண்டிச்சேரியைத் தலைமையகமாகக் கொண்ட விஞ்ஞானிகள் அபிவிருத்தியாளர்கள்; சர்வதேச பீடத்தின் (Association of Scientists, Developers and Faculties) (ASDF) மாநாடு பாங்கொக்கில் உள்ள ஹொலிடே இன் ஐந்து நட்சத்திர விடுதியில் 30.12.2104 செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது சிறந்த கல்விசார் பீடாதிபதி மற்றும் சிறந்த கல்விசார் ஆய்வாளர் என்ற இரண்டு … மேலும் வாசிக்க

நல்லையில் சிறப்புற்ற தமிழ்ச்சங்க நாவலர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர்விழா 14.12.2014 பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. கரிகணன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் சி. ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். சரவணை நாகேஸ்வரி வித்தியாலய ஆசிரியர் ஹேமலதா கண்ணதாசன் தமிழ்த்தெய்வ வணக்கத்தையும் தமிழ்ச்சங்கப் பொருளாளர் விரிவுரையாளர் ச.லலீசன் வரவேற்புரையையும் வழங்கினர். நாவலரின் பன்முக ஆளுமை என்ற பொருளில் உரும்பிராய் … மேலும் வாசிக்க

கவிதைப் பட்டறை கவிதைப் போட்டி முடிவுகள்..

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த் துறையும் இணைந்து நடாத்திய கவிதைப் பட்டறையின் முடிவில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரிவு கீழ்ப்பிரிவு முதலாம் இடம்  நேமிதா இரவீந்திரமூர்த்தி – தரம் 11 இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் பிரதாஐினி முத்தமிழ்ச்செல்வன் – தரம் 11 யாழ்.இந்து மகளிர் கல்லூரி மூன்றாம் இடம் பவதாரணி பிரதீபன் – தரம் 10 மகாஐனக் கல்லூரி பிரிவு மேற்பிரிவு … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்கம் நடாத்தும் நாவலர் விழா

கரிகணண் நிறுவன ஆதரவில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் நாவலர் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14.12.2014) நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது. தமிழ்ச் சங்கதலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வில் மங்கல விளக்கினை திரு.திருமதி.சி.ராஐ்குமார் தம்பதிகள் ஏற்றவுள்ளனர். தமிழ்த் தெய்வவணக்கத்தை திருமதி.ஹேமலதா கண்ணதாசனும் வரவேற்புரையை தமிழ்ச் சங்க பொருளாளர் திரு.ச.லலீசனும் நிகழ்த்தவுள்ளனர். நிகழ்வில் உரும்பராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.தி.செல்வமனோகரன் நாவலரின் பன்முக ஆளுமை எனும் தலைப்பில் … மேலும் வாசிக்க

சிறப்புற்ற கவிதைப் பட்டறை…

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கவிதைப் பட்டறை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ‘தமிழ்க் கவிதை மரபும் மாற்றமும்’ என்ற தொனிப்பொருளில் அமைந்த கவிதைப் பட்டறை 25.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பியின் தலைமையில் இடம்பெற்ற … மேலும் வாசிக்க

சிறப்புற்ற தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா…

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் முன்னெடுத்த பாரதி விழாவும் இணையத்தளத் தொடக்க நிகழ்வும் (11.12.201) புதன்கிழமை பாரதி பிறந்த நாளன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் பேராசிரியர் மா.சின்னத்தம்பி தலைமையில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிறப்புற இடம்பெற்றது. நிகழ்வின் அனுசரணையாளர்களான கிருபா லேணேர்ஸ் உரிமையாளர் அ.கிருபாகரன் தம்பதியரும் திருநெல்வேலி தேனு களஞ்சிய உரிமையாளர் தி.ஸ்ரீமோகனராஸ் தம்பதியரும் மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து சரவணை நாகேஸ்வரி … மேலும் வாசிக்க

திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் – கருத்தரங்கு

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்ப்பாண முகாமையாளர் சம்மேளனமும் இணைந்து நடத்திய திருக்குறளில் அறிவியல் கருத்துக்கள் என்ற பொருளில் அமைந்த கருத்தரங்கு 14.05.2014 புதன்கிழமை நல்லூர் யூரோவில் கருத்தரங்க மண்டபத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் டிஎப்சிசி வர்த்தக வங்கியின் யாழ் பிராந்திய முகாமையாளர் எஸ்.ரவீந்திரா வரவேற்புரையையும் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் வாழ்த்துரையையும் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் பேராயர் எஸ்.ஜெபநேசனின் நெறிப்படுத்தலில் … மேலும் வாசிக்க

வடபுலத்தில் தமிழ் வளர்க்கும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தொடர்பில் ஞாயிறு தினக்குரலில் வெளிவந்த கட்டுரை….. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை பாண்டியர்களுக்கு உரியது. முதற்சங்கம் தென்மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் கடைச்சங்கம் தற்போதைய மதுரையிலும் இருந்து தமிழ் வளர்த்ததாக வரலாற்றாசிரியர்கள் சுட்டுவர். பாண்டியரைத் தொடர்ந்து சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் முயற்சி யாழ்ப்பாணத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாண அரசர்கள் (ஆரியச் சக்கரவர்த்திகள்) எம்மண்ணை ஆண்ட காலத்தில் நல்லூரில் தமிழ்ச்சங்கம் ஒன்று இருந்ததாகக் கூறுவர். காப்பியம் புனையும் … மேலும் வாசிக்க

கவிதைப் பட்டறை

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறையும் இணைந்து நடாத்தும் கவிதைப்பட்டறை நிகழ்வு எதிர்வரும் 26.05.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது. துறைசார் வளவாளர்களால் வழங்கப்படவுள்ள இக் கவிதைப்பட்டறையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளோர் கலந்து கொள்ளலாம். அனுமதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையால் தயவுசெய்து கலந்துகொள்ள விரும்புவர்கள் தமது பெயர் மற்றும் மாணவராயின் பாடசாலை அல்லது வதிவிட முகவரியை 0778449739 என்ற தொலைபேசி … மேலும் வாசிக்க