யாழ். தமிழ்ச்சங்கத்தின் புத்தகத்திருவிழா ஆரம்பமாகியது

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கோவில் வீதியில் உள்ள கம்பன் கோட்ட மண்டபத்தில் நடத்தப்படுகின்ற நல்லூர் புத்தகத் திருவிழா கடந்த 17.08.2016 காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்ச்சங்க உபதலைவரும் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமாகிய கலாநிதி ஆறு. திருமுருகன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
சங்கத்தின் உப செயலாளர்களுள் ஒருவராகிய கோ. ரஜனிகாந் நன்றியுரை ஆற்றினார். ஈழத்து புத்தகங்களை மாத்திரம் கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் 12 மணிவரையும் மாலை 3 மணி தொடக்கம் இரவு 8 மணி வரையும் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில் மூத்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே வேளை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
01 02 03 04 05 06 08
Bookmark the permalink.

Leave a Reply