தங்கத்தாத்தா விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத் தமிழ் மன்றமும் இணைந்து முன்னெடுத்த தங்கத்தாத்தா நினைவு விழா 19.07.2016 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு முத்துத்தம்பி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது..
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளருமாகிய அ.பௌநந்தி கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் இ.பசுபதீஸ்வரன் வரவேற’;புரையாற்றினார். .
இன்றைய சமூகத்தை நெறிப்படுத்துவதற்குப் பெரிதும் துணைசெய்வது இலக்கியக் கல்வியா? அறிவியல் கல்வியா? என்ற தலைப்பில் முத்துத்தம்பி வித்தியாலய மாணவர் பங்குபற்றிய சொல்லாடுகளம் இடம்பெற்றது. . இதற்கு தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் நடுவராகச் செயற்பட்டார். நிகழ்வில் தமிழ்ச்சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ். ஆட்சிக்குழு உறுப்பினர் நா.வை. குமரிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
T 01 T 02 T 03 T 04 T 05 T 06 T 07 T 08
Bookmark the permalink.

Leave a Reply