அமரர் சி. சிவஞானம் அவர்களின் பிரிவு குறித்துத் தமிழ்ச்சங்கத்தின் அஞ்சலி

Sivaயாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறிதரனின் அன்புத் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 24.05.2016 அன்று இறைபதம் அடைந்தார். எதிர்வரும் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் யாவருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம்.

Bookmark the permalink.

Leave a Reply