பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனால் தமிழ்ச்சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கப்பட்டன.

ta-00பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு ஒரு தொகுதி தளபாடங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இதன் உத்தியோகபூர்வக் கையளிப்பு வைபவம் இன்று 18.10.2016 மாலை நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் த.நடனேந்திரன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ச.லலீசனிடம் தளபாடங்களைக் கையளித்தார்.  நல்லூர் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் தி.மகேஸ்வரகுமார், உதவி திட்டமிடல் பணிப்பாளர் து.சுதர்சனா ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினரால் எழுபத்தையாயிரம் ரூபா பெறுமதியில்
அலுவலக மேசை (8 x 4 x 2.5) – 01
அலுவலக அலுமாரி உருக்கு (3 x 1.5 x 6) – 01
கோவை அலுமாரி (04 இறாக்கைகளுடன்)  – உருக்கு – 01
கோவை தட்டு உருக்கு 4 x 1.5 x 6  – 01
கணினி மேசை  (pkct 008)– 01
அலுவலக கதிரைகள் (pvc 001) – 04
ஆகியன வழங்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Bookmark the permalink.

Leave a Reply