தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா -2016

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் கரிகணன் நிறுவனமும் இணைந்து நடத்தும் நாவலர் விழா 24.12.2016 சனிக்கிழமை காலை 9 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நிகழ்வில் நாவலரின் தொலைநோக்கு என்ற பொருளில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்கு கொள்ளும் ஆய்வரங்கு மற்றும் சென்னை கலாஷேத்திராவின் டிப்புளோமாதாரியான ஸ்ரீமதி ஷாலினி வாகீஸ்வரசர்மா (அமரர் கைலாசநாதக் குருக்களின் பேர்த்தி) அவர்களின் நாட்டிய அளிக்கை என்பன இடம்பெறவுள்ளன. 
நிகழ்வில் கரிகணன் நிறுவனத்தார் 30 பாடசாலைகளுக்கு நாவலர் திருவுருவச் சிலைகளை வழங்கவுள்ளனர். இச்சிலைகள் ஒன்றரை அடி உயரத்தில் மென்சீமெந்தில் (Plaster of Paris) அமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

navalar-01 navalar-02 navalar-03 navalar-04 navalar-05

Bookmark the permalink.

Leave a Reply