தமிழ்ச்சங்கம் வெளியிட்ட பாரதிபற்றிய நூல் பாரதியின் கொள்ளுப்பேரனிடம் கையளிப்பு

இந்திய குடியரசு தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத் தூதரகத்தின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியை யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தினர் சந்தித்துத் (26.01.2017) தமது முதல் வெளியீடாக அமைந்த பாரதியின் புலமைத்திறன் என்ற நூலைக் கையளித்தனர். இதன்போது தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தான் எழுதிய அந்நூலைக் கையளித்தார். பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ், பொதுச் செயலாளர் ச.லலீசன், துணைத்தலைவர் அருட்பணி ஜெறோ செல்வநாயகம் ஆகியோரும் உடனிருந்தனர்.

Barathy

Bookmark the permalink.

Leave a Reply