சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவர் நினைவரங்கம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து முன்னெடுக்கும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் எதிர்வரும் 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மண்டபத்தில் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.
.
இங்கிலாந்தில் வாழும் வைரவநாதன் சிவரதனின் ஆதரவில் இடம்பெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வராவும் வாழ்த்துரையை கல்லூரி அதிபர் மு.செல்வஸ்தானும் வழங்குவர்.

நிகழ்வில் நினைவுப் பேருரையை ஈழத்து மரபு வழிப் புலமைத்துவமும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரும் – ஓர் அறிமுகக் குறிப்பு என்ற பொருளில் கரைச்சி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் கவிஞர் கு. றஜீபன் ஆற்றவுள்ளார். உதயபாரதி ஐங்கரனின் நெறியாள்கையில் கல்லூரி மாணவியர் வழங்கும் ஆடல் அளிக்கையும் இடம்பெறவுள்ளது. கல்லூரி ஆசிரியர் பா.பாலமுரளி நன்றியுரை ஆற்றுவார்.

நான்காவது தமிழ்ச்சங்கம் என்ற பெருமைக்குரிய யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தை யாழ்ப்பாண மன்னர்கள் நிறுவிய பின்னர் இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் அதற்கு உயிர் கொடுத்த முன்னோடிகளுள் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் பங்கேற்போருக்கு நினைவுப் பேருரை அச்சுருவில் வழங்கப்படவுள்ளது.

Document-page-001 Document-page-002 Document-page-003 Document-page-004

Bookmark the permalink.

Leave a Reply