யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கு கதிரைகள்

Prakanthகௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் தமிழ்ச்சங்கத்தின் பாவனைக்கென 45 கதிரைகளை (NILKAMAL CHAMP) அன்பளிப்புச் செய்துள்ளார். பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இக்கதிரைகளைக் கையளிக்கும் வைபவம் கடந்த 10.08.2017 வியாழக்கிழமை காலை நல்லூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்தின் சார்பில் உபசெயலாளர்களுள் ஒருவராகிய கோ.ரஜனிகாந் (பிரகாந்) பாராளுமன்ற உறுப்பினரின் செயலரிடமிருந்து அன்பளிப்பைப் பெற்றுக்கொண்டார்.
Bookmark the permalink.

Leave a Reply