தமிழ்ச்சங்கத்தின் கவிதைப் பயிலரங்கு சனி ஆரம்பமாகிறது

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் மரபுக் கவிதைப் பயிலரங்கின் தொடக்க நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 14.04.2018 பிற்பகல் 4 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
 
 ஈழத்தின் மூத்த கவிஞர் சோ.பத்மநாதன், யாழ்.மாநகர ஆணையாளர் கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோரை வளவாளர்களாகக் கொண்டு இடம்பெறவுள்ள கவிதைப் பயிலரங்கு 12 வகுப்புக்கள் கொண்டதாக அமையவுள்ளது. வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3 மணி தொடக்கம் 5 மணி வரை இடம்பெறும். கற்கை நெறி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பயிலரங்கில் பங்குகொள்வதற்கு ஆர்வம் கொண்டு  விண்ணப்பித்தோருக்கான அழைப்புக்கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இருப்பின்  அன்றைய தினம் பிற்பகல் 3.45 மணிக்கு நல்லை ஆதீன மண்டபத்திற்கு வருகை தருமாறும் தமிழ்ச்சங்கத்தினர் கேட்டுள்ளனர். மேலதிக விபரங்களை தமிழ்ச்சங்கத்தின் இணைய முகவரியாகிய www.thamilsangam.org இல் பார்வையிடமுடியும். 
Bookmark the permalink.

Leave a Reply