அமரர் சி. சிவஞானம் அவர்களின் பிரிவு குறித்துத் தமிழ்ச்சங்கத்தின் அஞ்சலி

யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமாகிய கௌரவ சிவஞானம் சிறிதரனின் அன்புத் தந்தையார் சின்னத்துரை சிவஞானம் அவர்கள் 24.05.2016 அன்று இறைபதம் அடைந்தார். எதிர்வரும் 29.05.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் யாவருக்கும் எமது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கின்றோம். மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் விசேட நிர்வாகசபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் விசேட நிர்வாக சபைக்கூட்டம் 14.05.2016 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இல. 90 ஞானவைரவர் வீதி, கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில் என்ற முகவரியில் அமைந்துள்ள தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. தமிழ்ச்சங்கத்திற்கென அலுவலகத்தைத் தாபித்தல், பாடசாலை மாணவர்களின் தமிழறிவை மேம்படுத்தல், ஈழத்திற்குப் புகழ் சேர்ந்த தமிழ்ப்புலமையாளர்களை மையப்படுத்தி ஆய்வரங்குகளை நடத்துதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முதன்மை வழங்குவது பற்றி ஆராயப்பட்டது. இதேவேளை புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்சபைக்கூட்டம் கடந்த 08.05.2016 ஞர்யிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலனசபை மண்டபத்தில் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது. இதன்போது செயலாளர் இரா. செல்வவடிவேல் 2012 – 2016 ஆண்டு காலப்பகுதிக்கான செயலாளர் அறிக்கையை வாசித்தார். இதன் பிரதி சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைவிடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தங்களுடன் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து பொருளாளர் ச.லலீசன் … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்குப் புதிய நிர்வாகம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்திற்கான புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றது. அண்மையில் (08.05.2016 அன்று)  யாழ். நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச்சபைக் கூட்டத்திலேயே தெரிவுகள் இடம்பெற்றன. இதன்படி   பெருந்தலைவர் : பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைவர் : பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் துணைத் தலைவர்கள் : (1) பேராசிரியர் தி. வேல்நம்பி (பீடாதிபதி, முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) (2) கலாநிதி ஆறு. திருமுருகன் (தலைவர், … மேலும் வாசிக்க

ஈழத்து நாவலாசிரியர் கே. டானியல் நினைவு விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் பாடசாலை மாணவர்கள் மத்தியில் தமிழியல் ஆர்வத்தை வளர்க்கும் நோக்குடன் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் தொடர் வரிசையில் 18.03.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஈழத்து நாவலாசிரியர் கே. டானியல் நினைவு விழா இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு தொடர்பான அழைப்பிதழை இணைப்பில் காண்க. (இத்தொடரின் முதல் நிகழ்வு யாழ். இந்து மகளிர் கல்லூரியில் சி.வை.தாமோதரம்பிள்ளை விழாவாகவும் இரண்டாவது நிகழ்வு யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரியில் வீரமாமுனிவர் விழாவாகவும் … மேலும் வாசிக்க

செங்கை ஆழியானின் மறைவையொட்டி யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு

சாகித்திய ரத்னா செங்கை ஆழியான், இலங்கைத் தமிழ் இலக்கிய உலகில் ஓர் அத்தியாயமாகக் கொள்ளத்தக்கவர். யாழ். வண்ணார்பண்ணையில் உள்ள கலட்டியில் 1941 சனவரி 25இல் பிறந்தவர். தந்தை கந்தையா. வணிக முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர்;. தாய் அன்னம்மா. குடும்பத்தில் இவர் எட்டாவது பிள்ளை.. பாடசாலைக்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் புவியியல் துறைசார்ந்த  முதற்பட்டக் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றார். 1984 இல் முதுகலைமாணிப் பட்டத்தையும் 1991 இல் கலாநிதிப் பட்டத்தையும் … மேலும் வாசிக்க

யாழ். சென். பற்றிக்சில் நடைபெற்ற வீரமாமுனிவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் தமிழியல்சார் அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்தொடர் வரிசையில் கடந்த 19.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வீரமாமுனிவர் விழாவைச் சிறப்புற முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதன் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர்களுள் ஒருவருமாகிய அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வீரமாமுனிவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்ற பொருளில் மன்னார் கலையருவி நிறுவன இயக்குநர் … மேலும் வாசிக்க

தமிழ்ச்சங்க நிர்வாகக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகக் குழுக்கூட்டம் இன்று 20.02.2016 மாலை பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. எதிர்வரும் சித்திரை (ஏப்பிரல்) மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தை நடத்திப் புதிய நிர்வாகக் குழுவைத் தெரிவதென முடிவு செய்யப்பட்டது. இதேவேளை தமது அங்கத்துவத்தைப் புதிப்பிக்காத வருடாந்த அங்கத்துவம் பெற்றவர்கள் பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தமது அங்கத்துவத்தைப் புதுப்பிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்ச்சங்கத்தில் ஆயுள் அங்கத்தவராவதற்குரிய கட்டணம் ரூபா … மேலும் வாசிக்க

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும் வீரமாமுனிவர் விழா

யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம், பாடசாலை மட்டத்தில் உள்ள மாணவர்களின் தமிழியல்சார் அறிவை மேம்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்தொடர் வரிசையில் எதிர்வரும் 19.02.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வீரமாமுனிவர் விழா இடம்பெறவுள்ளது.  யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதன் அதிபரும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர்களுள் ஒருவருமாகிய அருட்பணி ஜெறோ செல்வநாயகம் அடிகளார் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் வீரமாமுனிவரும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் என்ற பொருளில் மன்னார் கலையருவி நிறுவன இயக்குநர் அருட்பணி … மேலும் வாசிக்க

தமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை

தமிழுக்குத் தொண்டு செய்வதையே இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை – கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதனின் மறைவுக்கு யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் அனுதாபம்.  கொழும்புத் தமிழச்சங்கத் தலைவர் முத்தையா கதிர்காமநாதன் தனது 72 ஆவது வயதில் காலமானார். என்பது வேதனையைத் தருகின்ற செய்தியாக அமைந்துள்ளது. மக்கள் சேவையே தெய்வீகத் திருப்பணி என வாழ்ந்த இவர் அகில இலங்கை இந்து மாமன்றச் செயலாளராகவும்  முன்னணி சமூகத் தொண்டு அமைப்புக்களின் முன்னிலை உறுப்பினராகவும் செயற்பட்டு வந்தார். நயினாதீவு … மேலும் வாசிக்க